ஓபிஎஸ்-க்கு டப் கொடுக்கும் விதமாக 4 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அன்றைய தினமே ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மற்றொரு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மூன்று பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று எம். பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஓபிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை… ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்…