Author: Sundar

கட்டணம் செலுத்திய பார்சல் பெட்டி மீது உணவகத்தின் பெயரை போட்ட கோவை உணவகத்திற்கு நுகர்வோர் மன்றம் அபராதம்

நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் பேக்கிங் பொருட்கள் அல்லது கொள்கலனில் லோகோ அல்லது பெயரை பதிவிடும் நடைமுறையை நிறுத்துமாறு நுகர்வோர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது, கட்டணம் செலுத்திய பார்சல் கொள்கலனில் லோகோவைப் பயன்படுத்தியதற்காக கோவையைச் சேர்ந்த உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது. வடவள்ளி…

மீட்பு பணிகளில் தொய்வு… படகுகளில் மீட்கப்பட பணம் வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு…

சென்னையில் மழை ஓய்ந்து சுமார் 40 மணி நேரம் ஆனநிலையிலும் சென்னையின் மையப்பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி முதல் வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான பெரும்பாக்கம் வரை வெள்ள நீர் வடியாமல் உள்ளது. தவிர இந்த பகுதியில் உள்ள பல…

4 மாவட்ட மாணவர்களுக்கு +1, +2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்ந்துவரும் நிலையில் இம்மாவட்ட +1, +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன் நடத்தப்பட உள்ள இந்த…

பல்லாயிரம் கோடி ரூபாய் கொட்டி உயர்த்திய போதும் தனது உயரத்தை வெளிப்படுத்திய சென்னை

1996 ஜீன் மாதம் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களில் 70 செ.மீ மழை பதிவானது. ஜீன் 14 ஒரே நாளில் 35 செ.மீ. மழை பதிவாகி கோடை காலத்தில் அதிலும் ஜீன் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை என்று வரலாற்றில் பதிவானது.…

பெருங்களத்தூரில் சாலையில் ஊர்ந்து சென்ற முதலை… குடியிருப்புகளில் விஷ ஜந்துக்கள் புகுந்தால் தொடர்பு எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி… வீடியோ…

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் நேற்றிரவு சென்னை பெருங்களத்தூரில் உள்ள வேலம்மாள் பள்ளி…

சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது ‘மிக்ஜாம்’ புயல்… புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட வாய்ப்பு…

மிக்ஜாம் புயல் இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The cyclone is now 110kms East-Northeast of #chennai #Michaungcyclone is to further intensify…

‘மிக்ஜாம்’ புயல் : சென்னையில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியது… ரயில், விமானம், பேருந்து சேவை பாதிப்பு…

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து 20 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரல் ரயில்கள் நிலையம் வரவேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது தவிர சென்ட்ரலில்…

கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலும் நிறுத்தம்

சென்னையில் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதை அடுத்து புறநகர் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்ட்ரல் – அரக்கோனம் உள்ளிட்ட அனைத்து வழித்தடத்திலும் காலை எட்டு மணி வரை…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய காட்சி கார் கேமராவில் பதிவானது… எப்.ஐ.ஆரில் தகவல்…

அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை தனது எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர்…

பிரதமர் மோடியுடன், இத்தாலிய பிரதமர் எடுத்துக்கொண்ட செல்ஃபி குறித்து சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் அதிபர் உள்ளிட்ட பல தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.…