நடிகர் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி முகநூல் பக்கத்தை தொடங்கி பண மோசடி செய்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் பக்கம் மூலம் இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.