சென்னை

ட்டப்பேரவை தேர்தல் குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்,

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளன.   இந்த தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளராக எம் ஆர் கே பன்னீர் செல்வம் களத்தில் உள்ளார்.   இவர் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதுவரை சுமார் 1.21 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 1.62 லட்சம் பேர் உயிர் இழந்து 1.14 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 5.37 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் குறிஞ்சிப்ப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை அடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.