சென்னை: கல்லூரி மாணாக்கர்களுக்கான அரியர்ஸ் தேர்வை, ரத்துசெய்து அரசு உத்தரவிட்டது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாள‍ை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், நாளை விசாரணைக்கு வரும் வகையில்தான், அந்த வழக்கு பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம், கல்லூரிகளில அரியர்ஸ் வைத்திருக்கும் மாணாக்கர்கள் அனைவரும், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. ஆனால், இந்த அறிவிப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் எழுந்தன.

அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. சில கல்வி நிறுவனங்கள், இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றங்களுக்கும் சென்றன. இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் தனது இடைக்கால உத்தரவுகளை அளித்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.