ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.

இப்படத்திற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார் ஷங்கர். முதல்கட்டமாக நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் ஷங்கரின் முதல் தெலுங்குப் படம் எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு, இன்னும் மூன்று வாரங்களில் அது குறித்து பதிலளிப்பதாக ராம் சரண் கூறியுள்ளார்.