சென்னை: மெட்ரோ ரயில் பணி, சாலை பணி போன்றவற்றால் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஐபிஎல் போட்டி தொடங்குவதை முன்னிட்டு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று (மாா்ச் 22) மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மாா்ச் 22)  ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல்போட்டியாக, சென்னை – பெங்களூரு அணிகளிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இதுதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று (மாா்ச் 22) மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை செல்லலாம்.

வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை செல்ல அனுமதி இல்லை.

பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்படும்.

பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம்.

வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சாந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை.

மாநகர பேருந்து நேராக ரத்னா கஃபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

இதேபோல ரத்னா கஃபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.

பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்லவதற்கு அனுமதி இல்லை.

போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகா்களின் வாகன நிறுத்த அனுமதி அட்டை இல்லாத வாகனங்களை, மெரீனா கடற்கரையின் உட்புறச் சாலையில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் கோலாகலம் – அணி வீரர்கள் மற்றும் போட்டிகள் விவரம்…