சென்னை: கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவம் என்றும், அவை அவை குறிப்பில்  இடம்பெறாது என்றும், ஆளுநர் மரபை மீறியது சரியல்ல என்றும்  சபாநாயகர் அப்பாவு  கூறினார். முன்னதாக, அவையில் இருந்து கவர்னர் ரவி புறப்பட்டு சென்றார்.

தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தமிழில்  வணக்கம் தெரிவித்து  தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நிமிடங்களில் தனது உரையை முடித்தார். தமிழ்நாடு அரசின் உரை அரசியல் சாசனத்துக்கு எதிராக இருப்பதாக கூறியதுடன், தேசிய கீதம் தொடர்பான தனது கோரிக்கை ஏற்கபடவில்லை என்று கூறி, உரை புறக்கணித்து விட்டு அமர்ந்தார். இதையடுத்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் எதிரான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்ய எழுந்து பேசத் தொடங்கினார். இதையறிந்த ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். அப்போது பேசிய சபாநாயகர்,  இனிதான் தேசிய கீதம் பாடுவோம் என்று கூறினார். ஆனால், ஆளுநர் அதை பொருட்படுத்தாமல் புறப்பட்டு சென்றார். அப்போது  துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம் குறித்து  சபாநாயகர் ஒரு மனதாக நிறைவேறியதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், * அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என்றும் கூறியதுடன்,  கவர்னர் பேசியது அவை குறிப்பில் இடம்பெறாது, அவை நீக்கப்படும் என்றார்.

மேலும்,  சபை மரப்புபடி, கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.  தமிழக சட்டப்பேரவையில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவது தான் தமிழ்நாடு சட்டசபையின் மரபு. அதனால், கவர்னரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றதுடன்,  கொள்கை முரண்பாடு இருந்தாலும் மாண்புடன் அவை நடத்துவதுதான் மரபு என்று கூறினார்.

கடந்தாண்டு ஆளுநரின் சர்ச்சைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டும் அரசு தயார் செய்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காமல் புறக்கணித்ததால், ஆளுநர் பேசிய கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறை: ஆளுநர் உரை புறக்கணிப்பு – சபாநாயகர் விளக்கம்!