சென்னை: தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரை முழுவதையும் வாசிக்காமல் ஆளுநர் என்.ரவி புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பேரவையின் முதல் கூட்டத்தொடரின்போதும், தமிழ்நாடு அரசு எழுதி கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல், மாற்றி வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த முறையும், தனது உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கேரள சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்க மறுத்து, இறுதிப்பேராவை மட்டுமே வாசித்து, புறக்கணித்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறை.

ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றாமல் இருப்பதற்கு சட்டப்பேரவையிலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஆளுநர் அதை கண்டுகொள்ளாமல் அவையில் அமர்ந்திருந்தார். இதுவும் வியப்பை ஏற்படுத்தியது.

உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தது ஏன்?

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில், “தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். உரையின் துவக்கத்திலும் இறுதியிலும் இசைக்க வேண்டும் என்ற எனது பலமுறை கோரிக்கை மற்றும் அறிவுரை வழங்கியுள்ளேன், இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உரையில் உள்ளவற்றை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் படிக்க வில்லை. நான் அவர்களுக்கு குரல் கொடுப்பது அரசியலமைப்பு கேலிக்குரியதாக இருக்கும். உரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் முரண் படுகிறேன் என்று கூறியதுடன், இந்த சட்டப்பேரவையை பொறுத்தவரை, நான் எனது உரையை முடிக்கிறேன். இந்த சட்டப்பேரவை மக்களின் நலனுக்காக பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான விவாதமாக இருக்க வாழ்த்துகிறேன். என குற்றச்சாட்டி வாழ்க தமிழ், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என  உரையை 4 நிமிடத்திலேயே முடித்துக்கொண்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

அதனை தொடர்ந்து, அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்காத சூழல், அதன் தமிழாக்கத்தை வாசித்து வருகிறார் சபாநாயகர் அப்பாவு வாசிங்ததார்.

அப்போது, “ தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம் இதுதான் மரபு. கணியன் பூங்குன்றனாரின் வரிகளான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்துகிறது என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,487 கோடி செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்து துறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது

. தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது. தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது.” என  திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.