சென்னை: நடப்பாண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து   அரசாணை வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  இந்த ஆண்டு தமிழ்நாட்டில், அதுவும் கடற்கரை மாவட்டமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்திய அணியின் ஆலோசராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்ல புரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரின் துவக்க, நிறைவு விழாவிற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரூ.92.13 கோடி ஒதுக்கிய நிலையில், விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.8 கோடி ஒதுக்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த கூடுதலாக ரூ.15 கோடி தர அரசிடம் இந்திய செஸ் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.