சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழக சுகாதாரத்தை நடத்தி வந்தது. இதன்மூலம் கோடிக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் தொற்று குறைய தொடங்கியதும், தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் தடுப்பூசி முகாம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மீண்டும் தடுப்பூசி முகாமை நடத்த தமிழகஅரசு முன்வந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் எந்த வகையில் நடத்தப்படவுள்ளது என்று கூறி உள்ளார்.  தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளமால் உள்ளனர். இதனால் தொற்று மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2வது டோஸ் செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் அளித்து இந்த முகாம் நடைபெற உள்ளது. இன்றைய தேதியில் கிராம் வாரியாக 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்களின் பட்டியல் பொதுசுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்களின் பெயர்,அடையாள எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் எடுத்த நாள், 2 வது டோஸ் எடுக்க வேண்டிய நாள், முதல் டோஸ் செலுத்தி எத்தனை நாட்கள் ஆகி உள்ளது என்ற அனைத்து தகவலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். தேவைபட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் கூட அமைக்கப்படும். அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அடுத்த அலையில் வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.