சென்னை: மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து, திமுக எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஜனவரி 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா முதலில்  2019ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களைவில், சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டத்தொடரில்  நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் அணைகள் இருக்கும் நிலையில், அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்தியஅரசு நிறைவேற்றியுள்ள  இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமிட்டு உள்ளது. இது, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல். எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். இதை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

நாடு முழுவதும் அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்….