சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லதுக்குச் சென்று  தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி பெற்றார். அவரை தயாளு அம்மாள் வாழ்த்தினார்.

நடைபெற்று  முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். முன்னதாக வெற்றிச்சான்றிதழுடன் இரவு மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா  சமாதிகளில் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில் தனது கோபாலபுரம் வீட்டுக்கு வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்தும் ஆசியும்  பெற்றார்.

முன்னதாக கோபாலபுரம் இல்லம் சென்ற மு.க ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, அங்கு கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.