சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 7300 பேரில் 2015 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 54 லட்சம் பேர் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை என்றும் 1.46 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர் மே மாதம் 8 ம் தேதி 1 லட்சம் தடுப்பூசி இலக்குடன் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தினமும் போடப்படுவதாகவும் தெரிவித்தார்.