தமிழகத்தில் இன்று மொத்தம் 18,849 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 52 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 பேர் குணமடைந்த நிலையில் 334 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் 34 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 10 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது,

புதுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, காஞ்சிபுரம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.