சென்னை; நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு  மீண்டும உயரத்தொடங்கி உள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தற்போதைய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.46 கோடி (4,46,95,420) ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 98.8 சதவீதமாக உள்ளனர்.நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 4,41,58,703 ஆக உள்ளது. தற்போதைய இறப்பு எண்ணிக்கை 1.19 சதவீதமாக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் 220.65 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சில புதிய வழிகாட்டுதல்களை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைகளை எதிர்கொள்ள, சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் என ஐந்து வகையான உத்தியைப் பின்பற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள என்ன வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது

கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை தரக்கூடாது

கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா தொற்று இல்லாத பட்சத்தில், லோபினாவிர்-ரிடோனாவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், ஐவர்மெக்டின், மோல்னுபிராவிர், பவிபிராவிர், அசித்ரோமைசின் மற்றும் டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது. பிளாஸ்மா தெரபியும் பயன்படுத்தக் கூடாது.

கொரோனா அறிகுறி தோன்றி 10 நாட்களுக்குள் மிதமான மற்றும் தீவிரமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 5 நாட்கள் வரை ரெம்டெசிவிர் மருந்துகளை பரிந்துரைக்கலாம். இதுவும் ஆக்சிஜன் பொருத்தப்படாத மற்றும் வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரக்கூடாது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாக்டீரியா தொற்றுக்கு மருத்துவ ரீதியாக சந்தேகம் இருந்தாலொழிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தக் கூடாது.

பிற உள்ளூர் நோய் தொற்றுகளுடன் கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

லேசான நோய் அறிகுறிகள் இருக்கும்போது சிஸ்டமிக் மற்றும் கார்டிகோ ஸ்டீராய்டுகளை பரிந்துரைக்க தேவையில்லை.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ஐவர்மெக்டின், மோல்னுபிராவிர் மற்றும் ஃபேவிபிராவிர் உட்பட, கோவிட்-19-ல் பயன்படுத்தக்கூடாத சில மருந்துகளை மத்திய சுகாதாரதுறை அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி உள்ளன.

நோயாளிகள் 5 நாட்கள் வரை ரெம்டெசிவிர் மருந்தை மிதமான அல்லது கடுமையான சந்தர்ப்பங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் குறிபிடப்பட்டுள்ளது.

கடுமையான நோய் அல்லது ICU அனுமதிக்கப்பட்ட 24-48 மணி நேரத்திற்குள் Tocilizumab-ஐப் பரிசீலிக்க வேண்டும்.

அதாவது, மிதமான அல்லது கடுமையான நோய் வேகமாக முன்னேறி வருபவர்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.