

இதுகுறித்து கூறிய டெல்லி காவல்ஆணையர் சாகர்பிரீத், ராகுல் காந்தியை சந்தித்து அவர் பேசியது தொடர்பான விவரங்களை கேட்டோம். அவரும் பாத யாத்திரையின் போது பேச யது தொடர்பான தேவையான விவரங்களை அளிப்பதாக கூற யிருக்கிறார். அதற்கு சற்று கால அவகாசம் கேட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக நாங்கள் அளித்த நோட்டீஸையும் ராகுல் காந்தியின் அலுவலகத்தினர் பெற்றுக் கொண்டனர். ராகுல் காந்தியிடம் இருந்து விவரங்கள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம் என்று கூறினார்.
ராகுல் காந்தி வீட்டுக்கு போலீஸார் சென்றதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி கேரள மாநிலம் வயநாட்டில் அவரது எம்பி தொகுதிக்கு உட்பட்ட பல குடும்பங்களுக்கு புதியதாக கட்டிய வீட்டின் சாவியை வழங்கும் விழாவில் ராகுல்காந்தி பேசும்போது, நான் போலீசாரை கண்டு சிறிதும் பயப்படவில்லை. நான் ஏன் பயப்படவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்னை. பிரதமர், பா.ஜ, ஆர்எஸ்எஸ், காவல்துறையை கண்டு பலர் பயப்படலாம். ஆனால் நான் இல்லை. காரணம் நான் உண்மையை நம்புகிறேன். நான் எத்தனை முறை தாக்கப்படுகிறேன், எத்தனை முறை என் வீட்டிற்கு போலீசார் அனுப்பப்படுகிறார்கள் அல்லது என் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பது முக்கியமல்ல. நான் எப்போதும் உண்மைக்காக நிற்கிறேன். அதுதான் நான்.
இவ்வாறு அவர் பேசினார்.