சென்னை: தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில்,  வரும் 22ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கோவிட் 19 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், 9,10 மற்றும் 11 வகுப்புகளுக்கான பள்ளிகளை மார்ச் 22 முதல் மேலதிக உத்தரவு வரை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணாக்கர்களுக்கு  ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து நடத்த சுகாதாரத்துறை வல்லுநர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.