டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது.

உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாபில், ஆட்சியை பறி கொடுத்தது. மேலும், உபி.உள்பட மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இது கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில்  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி: காங்கிரஸ் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை….