சென்னை:
திமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இன்று எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுககப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் நோக்கி இபிஎஸ் சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது இல்லத்தில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார்.

இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிய தொடங்கியனர்.

இந்நிலையில்,  அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீது ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்கு குவிக்கப்பட்டுள்ள காவலர்கள், இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.