சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், திமுக அரசு கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அதிமுக, பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளர்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தை பாஜக, அதிமுக புறக்கணித்து உள்ளது.

இதுகுறித்த செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர்  மா.சுப்பிரமணியன். நீட் விலக்கு மசோதா குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக, பாஜக புறக்கணிக்கின்றன. புறக்கணிப்பு என்பது எதிர்காலத்தில் மக்களின் மூலமும் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.