புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஒற்றை பாடலுக்கு ஆடிய சமந்தா திரைப்பட ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

அந்தப் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவை விட அதிகம் பேசப்பட்டவராக இருந்தார் சமந்தா.

இதனைத் தொடர்ந்து ஐட்டம் சாங்கில் இடம்பெற நடிகைகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

தற்போது காத்து என்ற படத்தில் கானா பாலா பாடியுள்ள ‘கலரு கோழி குஞ்சு’ என்ற பாடலுக்கு வனிதா விஜயகுமார் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் இதுதொடர்பாக வெளியான இந்த பாடல் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.