சென்னை

டிகை குஷ்பு வைரமுத்து – இளையராஜா சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்..

இசையமைப்பாளர் இளையராஜா திரைப் படப் பாடல்களின் இசை காப்புரிமை தனக்கே சொந்தம் என வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காகவும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் இளையராஜா இசையில் பல பாடல்களை எழுதிய வைரமுத்து, ‘பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் என்னவாகும்?’ என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக திரைத்துறையில் பல விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், நடிகை குஷ்பு இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நடிகை குஷ்பு நேற்று இரவு, ‘அரண்மனை4’ படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். செய்தியாளர்கள் வைரமுத்து- இளையராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டு குஷ்புவிடம் “இசை பெரிதா? மொழி பெரிதா?” என்று கேள்வி எழுப்பபின்ர்

அதற்கு குஷ்பு,

“திரைத்துறையில் எல்லா விஷயங்களுமே டீம் வொர்க்தான். இந்த விஷயத்தை இயக்குநரும் இசையமைப்பாளரும் தான் பேச வேண்டும். நடிகை, தயாரிப்பாளராக நான் இதை பேசக்கூடாது. வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் போர் போய்க் கொண்டிருக்கிறது என்றால் அவர்கள்தான் இதுகுறித்துப் பேச வேண்டும். மற்றபடி எனக்கும் இசைக்கும் சம்பந்தம் கிடையாது” 

என்று கூறி உள்ளார்