கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’

இதன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வெளியாகிறது.

ஆதித்ய கரிகாலன், வந்திய தேவன், நந்தினி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களின் தோற்றங்களை ஒவ்வொன்றாக இந்த வாரம் வெளியிட்டனர்.

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்டிருந்தனர்.

இன்று குந்தவையாக நடித்து வரும் நடிகை த்ரிஷா-வின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்து வருவதாகவும் அவரது போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது.