சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மழை நேரத்தில் நேற்றிரவு சென்னை பெருங்களத்தூரில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று சாலையை கடந்து சென்றது அந்தப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மழை வெள்ளம் புகுந்தவுடன் புதர்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.