மிக்ஜாம் புயல் இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது அதன் வேகத்தை சுமார் இருமடங்கு அதிகரித்து 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று இரவு அல்லது நாளை அதிகாலை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/delhiwa1/status/1731532832227434825

இருந்த போதும் சென்னை கடற்கரையை ஒட்டி புயல் பயணிக்கும் நேரத்தில் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘மிக்ஜாம்’ புயல் : சென்னையில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியது… ரயில், விமானம், பேருந்து சேவை பாதிப்பு…