சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,374 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 26,94,089 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுன், இதுவரை 36,004 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,374 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளடன் இதுவரை 26,44,805 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது  13,280 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 1,25,158 . இதுவரை 5,01,76,761 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளன.