சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்ட தகவலின்படி, இன்று  மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டு உள்ளது. இதில், சென்னையில், 141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை  26,94,089 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், இதுவரை 36,004 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதேவேளையில்  26,44,805 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 13,280 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் இன்று மேலும் 141 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 55,36,51 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது 1674 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் இதுவரை 8,534 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று மேலும் 171 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 54,34,43 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 4
செங்கல்பட்டு 97
சென்னை 141
கோயம்புத்தூர் 132
கடலூர் 20
தர்மபுரி 18
திண்டுக்கல் 12
ஈரோடு 72
கள்ளக்குறிச்சி 9
காஞ்சிபுரம் 33
கன்னியாகுமரி 19
கரூர் 17
கிருஷ்ணகிரி 15
மதுரை 17
மயிலாடுதுறை 13
நாகப்பட்டினம் 20
நாமக்கல் 55
நீலகிரி 18
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 16
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 7
சேலம் 54
சிவகங்கை 11
தென்காசி 2
தஞ்சாவூர் 54
தேனி 4
திருப்பத்தூர் 3
திருவள்ளூர் 40
திருவண்ணாமலை 19
திருவாரூர் 31
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 10
திருப்பூர் 81
திருச்சி 45
வேலூர் 18
விழுப்புரம் 10
விருதுநகர் 6