இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் யானை படத்தில் நடிக்கிறார் அருண் விஜய் . இது அவரின் 33ஆவது படமாகும். Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட உருவாகவுள்ள இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். கங்கை அமரன் , பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அசுரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. யானை படம் தொடர்பான ஒரு புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அருண்விஜய், யானை படத்திற்கான மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.