அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பின் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தை அரிசில் மூர்த்தி எழுதி இயக்கியிருந்தார்.

படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அத்துடன் படம் கதைத் திருட்டு சர்ச்சையிலும் சிக்கியது.

இந்தப் படம் 2016-ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருந்தது. விமர்சகர்கள் கதைத் திருட்டு விஷயத்தை எழுதிய பிறகே, தான் தயாரித்த படத்தின் கதை மராத்திய படத்திலிருந்து திருடப்பட்டது என்பது சூர்யாவுக்கு தெரியவந்தது.

சூர்யா, இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து திட்டியதுடன், கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன் நிற்கவில்லை. மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டாக பெரும் தொகையும் அளித்துள்ளார்.