பிக்பாஸ் போட்டியிலிருந்து சிலர் விலகியுள்ளனர் மற்றும் பிக்பாஸால் சில காரணங்களுக்காக போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

அந்த வகையில் சீசன் 1 ல் நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என்று கேட்டு போட்டியிலிருந்து விலகினார். பரணியும் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முயன்று, பிக்பாஸிடம் தன்னை வெளியே விடுங்கள் என்றுக் கூறி தானாக வெளியேறினார்.

சீசன் 3 நிகழ்ச்சியில் மதுமிதா பிக்பாஸ் வீட்டின் விதிமீறலை உடைத்து தற்கொலை செய்ய முயன்றதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதே சீசனில் சரவணன் பெண்களிடம் காலெஜ் பருவத்தில் தவறாக நடந்துக் கொண்டதாக ஹவுஸ் மேட்ஸிடம் கூறினார்.’அதனை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றுக் கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத திருப்பங்கள் எல்லா சீசனிலும் நடந்துள்ளது. ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ல் ஒரு வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

‘தவிர்க்க முடியாத சில காரணங்களால் நமீதா மாரிமுத்து போட்டியை விட்டு விலகினார்’ என்று பிக்பாஸ் மக்களிடம் தெரிவித்தார். பின்பு கமல்ஹாசன் வழக்கம் போல் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் உரையாட ஆரம்பித்துவிட்டார். வெள்ளிக்கிழமை நடந்த காட்சிகள் எதுவும் ஒளிப்பரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.