கடந்த 2018-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு 2’ நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் ‘கோல்மால்’ படத்துக்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர்.

பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இப்படத்தை இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.