நடிகை கங்கனா ரனாவத் பற்றி Republic TVயில் ஆங்கர் அர்ணாப் கோஸ்வாமி நேரலையில் விவாதம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகை கஸ்தூரியை அவர் பேசவே அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமான கஸ்தூரி நிகழ்ச்சியின் நேரலையிலே மத்திய உணவு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவி ட்விட்டரில் ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.


“நான் அர்னாப்பை ஹைப்பர்மோடில் 60 நிமிடங்கள் பார்த்தேன், அவர் எப்படியும் என்னை பேச அனுமதிக்க மாட்டார், அதனால் நான்
மதிய உணவைப் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். ஆனால், ஸ்கைப்பை சைன் அவுட் செய்ய மறந்துவிட்டேன். இந்த குழப்பத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இதில் எந்த குற்றமும், அவமரியாதையும் இல்லை என பதிவிட்டுள்ளார் .