சென்னை:
ராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டான நிலையில் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், திமுக ஆட்சியின் இலக்கணமே ‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்’ என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், பத்து ஆண்டு கால இருளை விரட்டி புதிய ஒளி பரவிக் கொண்டிருக்கிறது என்றும், ஓராண்டு கால உழைப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் எத்திசையும் முழங்கிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.