சில நாட்களுக்கு முன்பு சிறுவிபத்தில் சிக்கிய சுசீந்திரன் மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் இருந்து வருகிறார்.

இதனிடையே, தனது அடுத்த படத்துக்கான கதை முழுமையாக முடித்துவிட்டார் சுசீந்திரன். இதில் விக்ரம் பிரபு தான் நடிப்பதாக கூறி தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர். இந்தப் படத்தை சுசீந்திரனின் சகோதரர் தாய் சரவணன் தயாரிக்கவுள்ளார்.