ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

ஆதி, பார்வதி திருமணத்தை ஆதியின் அம்மா அகிலாண்டேஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? என பார்த்து கொண்டிருக்கும் போது இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பாரதா நாயுடுவுக்கும், பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

எளிமையான முறையில் திருவண்ணாமலையில் பாரதா நாயுடு – பரத் திருமணம் நடைபெற்றுள்ளது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல், பாரதா நாயுடு திரீரென்று திருமணம் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.