துரை

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ராமர் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவர் இல்லை என தெரிவித்துள்ளார். 

நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்  சந்தித்துப் பேசி உள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம்

“அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டு 500 ஆண்டுக் கால போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. ராமர், இந்திய நாகரிகம், கலாச்சாரத்துக்கான நம்பிக்கை ஆவார். அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர். சத்தியத்தின் வழி நின்றவர்.

அதனால்தான் நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அவரை வழிபடுகிறார்கள். அது மட்டும் அல்ல, தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களின் பெயரிலும் ராம் என்பது உள்ளது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா பிரதிபலிக்கும் என நினைக்கவில்லை., தேர்தலுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அப்படி ஒரு சிலர் நினைக்கலாம். ராமர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் அவர் எந்த ஒரு கட்சிக்கும்  சொந்தமானவர் அல்ல. 

மகாத்மா காந்தி ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்றுசொன்னார்.  ராம ராஜ்ஜியத்தில் ஊழல் இல்லாத, சுரண்டல் இல்லாத, அடாவடித்தனம் இல்லாத, சாதி மத ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகும். எனவே ராம ராஜ்ஜிய திசையை நோக்கித்தான் செயல்பட வேண்டும்.” 

என்று கூறி உள்ளார்.