சென்னை

த்திய பாஜக அரசு தமிழகத்துக்குப் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர், மிக்ஜம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காகத் தமிழகத்துக்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

தற்போது டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை, வெள்ளப் பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 

தமிழக அரசு கேட்ட நிதியில், மத்திய அரசு ஒரு சதவீதத்திற்குக் கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக வழங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.3498.82 கோடி அளித்திருக்கிறது. 

மத்திய அரசுக்கு அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழகத்துகு பா.ஜ.க. அரசு நிதிப் பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். ”

என்று தெரிவித்துள்ளார்.