உதகமண்டலம்

உதகமண்டலத்தில் வரும் 10 ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இங்குக் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாலும்.

இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி எப்போது தொடங்கும் எனச் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து வந்தனர். மே-17-ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  தற்போது, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே10 ஆம்தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நீலகிரி  மாவட்ட ஆட்சியர் அருணா இதை அறிவித்துள்ளார். ஏற்கனவே மலர்க் கண்காட்சி மே-17 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், மே 10 ஆம் தேதி தொடங்கும் என்றும், கடந்த ஆண்டு 7 நாட்கள் நடைபெற்ற மலர்க் கண்காட்சி, இந்த வருடம் 10 நாட்கள் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.