சென்னை,

டல் நலமில்லாமர் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதிய பார்வை ஆசிரியர் நடராஜனை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சிறுநீரகம், கல்லீரல் செயல் இழப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

இந்நிலையில், தற்போது திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்பவரை சென்னைக்கு  கொண்டு வந்துள்ளனர். அவரது  கிட்னி மற்றும் கல்லீரல் நடராஜனுக்கு பொருந்துமா என்பது குறித்து , பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து இன்று நடராஜனுக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிகிறது.

இந்நிலையில் வை கோ மருத்துவமனை சென்று  நடராஜனை சந்தித்து உடல் நலன் விசாரித்தார்.