புதுக்கோட்டை: ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ. பூமிநாதன் கொலை தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக புதுக்கோட்டை காவல்துறை அறிவித்து உள்ளது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத் சிறப்பு எஸ்.ஐ  பூமிநாதன், நள்ளிரவு நகர்வலத்தின்போது,  ஆடு திருட்டு கும்பலை மடகியபோது, அவர்களால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுவந்தது. அப்போது, ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட பகுதியில், அதே நேரத்தில்  இரு சக்கர வாகனத்தில் வேகமாக சிலர் சென்ற காட்சிகள் கிடைத்தன. அதைக்கொண்டு ஆய்வு செய்து வந்னதர்.

எஸ்.ஐ, பூமிநாதன், வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர்  ஈடுபட்டதாக தெரியவந்த நிலையில், அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை! முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி…