சென்னை:

இன்று பிறை தெரிந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.


ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பர். நோன்பு நிறைவடைந்தபிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தெரிந்த மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் மாத நோன்பு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் இன்று பிறை தெரிந்ததால், நாளை புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதேபோல், நாட்டில் பல பகுதிகளில் பிறை தெரிந்துள்ளது.