ண்டலூர்

டந்த 2 நாட்கள் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மிக்ஜம் புயல் காரணமாக 4 இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.  இதனால் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளநீர் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் புகுந்தது.

வண்டலூர் உயிரியல் பூங்கா முழுவதும் இதனால் வெள்ளக்காடானது. பூங்காவில் 30 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதையொட்டி பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காகக் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டு பூங்கா மூடப்பட்டு இருந்தது.

இந்த பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.