சென்னை

ன்றுடன் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நிறைவடைகிறது.

செப்டம்பர் 15 ஆம் தேதி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரையில் முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நட்ந்தது, பிறகு இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5 முதல் 16 வரை நடைபெற்றது

இவ்வாறு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யாதவர்களுக்காகச் சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது..

இவ்வாறு விடுபட்டவர்களுக்குக்காக்க கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நிலையில் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இதுவரை மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக 1.54 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.. இம்மாத இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது