சென்னை

மிழகம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி  உள்ளார்.

இன்று சென்னை மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ராமலிங்க இல்ல திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முதல்வர் தனது உரையில்,

”திமுக நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது. இந்த நீட் தேர்வுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.

அதிமுக கூட நீட் தேர்வுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை  ஆதரித்தது. இந்த நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர் அல்ல; ஜனாதிபதி தான். ஆளுநர் மசோதாவை வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பும் தபால்காரர் மட்டுமே ஆவார்.

திமுக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது.. உறங்காது.. போராட்டம் தொடரும். ஏழை எளிய மக்கள் நீட் தேர்வால் மருத்துவராகும் கனவு பறிக்கப்படுகிறது. தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறத் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது”.

என்று கூறினார்.