பழனி

இன்று பழனி முருகன் கோவில் செல்லும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடாகும். பழனி மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக ரோப்கார், மின் இழுவை ரயில் சேவைகள் உள்ளன. இதில் ரோப்கார் மூலம் செல்லவே  பலரும் விரும்புகின்றனர்.

இந்த ரோப்கார் பராமரிப்பு பணிக்காகத் தினமும் ஒரு மணி நேரம், மாதத்துக்கு ஒரு நாள், வருடத்துக்கு ஒரு மாதம் என ரோப்கார் நிறுத்தப்படுவது வழக்கம். இன்று இந்த மாதத்துக்கான பராமரிப்பு பணி இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

எனவே இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மின் இழுவை ரயில் மூலமாகவோ, படிப்பாதை வழியாகவோ கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானைத் தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.