சென்னை

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.01 ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையைத் தினசரி மாற்றுகின்றன.   கடந்த சில நாட்களாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

முன்பு கொரோனா உச்சத்தில் இருந்த போது கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்தது.   ஆனால் அப்போது மத்திய அரசு வரிகளை உயர்த்தியதால் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.  தற்போது கொரோனா முடிந்த பிறகு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர்ந்துள்ளது.  இன்று வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103 ஐ தாண்டி உள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது.  இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.103.01க்கு விற்கப்படுகிறது டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்துள்ளது.  இன்று டீசல் ஒரு லிட்டர் ரூ.98.92க்கு விற்பனை செய்யப்படுகிறது.