சென்னை

இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே  சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை, காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“இன்று தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இன்று நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் இயக்கப்படும் ரயில் சேவைக்குப் பதிலாகக் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும்.

இதைத்தவிரக் காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 08:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.