ராமநாதபுரம்

தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார். 

விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்குப் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது,

”புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள்.

ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நீட் விவகாரத்தில் பாராட்ட வேண்டும். ஜெயலலிதா மறைந்ததும், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. 

அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் நீட் தொடர்பாகத் தற்கொலை செய்துள்ளனர். டில்லியில் நீட் தேர்வு ரத்து தொடர்பாகப் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி.”

என்று கூறினார்.