சென்னை: ஜூலை 24ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து தேர்வு தயாராகுங்கள்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார் 24ந்தேதி குரூப் 4 தேர்வுதேதிகளை அறிவித்து மார்ச் 30ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறியது. அதன்படி, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி  நாள் (ஏப்ரல் 28).  குரூப் 4 தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் கடைசி நாளான இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழக அரசன்  பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி மொத்தம் காலியாக உள்ள  7,382 பணியிடங்களுக்கு  தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.  274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும். இந்த தேர்வுக்கு இதுவரை  17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.